"சுத்தி சுத்தி வந்துட்டு இருக்கோம்...உட்கார கூட இடமில்லை..." - திடீரென நள்ளிரவில் பரபரப்பான கோயம்பேடு

x

சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்து பற்றாக்குறையால் பயணிகள் நீண்ட நேரமாக காத்திருந்தனர்..கோடை விடுமுறையை முன்னிட்டு, சென்னையில் இருந்து பலரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு படையெடுத்தனர். ஆனால், கள்ளக்குறிச்சி, கடலூர், விருத்தாசலம், நெய்வேலி, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள், பேருந்து பற்றாக்குறையால் நீண்ட நேரமாக காத்திருந்தனர். சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த பயணிகள், உட்கார கூட இடம் கிடைக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டினர். இதனால், ஆத்திரமடைந்த அவர்கள் சிறிது நேரம் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். அவர்களிடம், போலீசார் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்