"கோலி சோடாவில் கூலிங் இல்ல.." - கடைக்காரரை கடித்த போதை இளைஞர் - பதிலுக்கு பல்லை உடைத்த உறவினர்கள்

x
  • போச்சம்பள்ளி அடுத்த புதுமோட்டூர் கிராமத்தில் சென்றாயன் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார்.
  • இவரிடம் கடைக்கு வந்த துயாமணி மற்றும் சுப்பிரமணி ஆகிய இருவர் கோலி சோடா கேட்டுள்ளனர்.
  • இருவரும் மதுபோதையில் இருந்ததாக கூறப்படும் நிலையில், சென்றாயன் கொடுத்த கோலி சோடாவில் கூலிங் இல்லை என கூறி அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
  • தகராறின் சத்தம் கேட்டு வந்த சென்றாயனின் உறவினர்களுக்கும், இளைஞர்கள் இருவருக்குமிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
  • மோதலில், சென்றாயன் மற்றும் அவரது உறவினர்களை இளைஞர்கள் இருவரும் கடித்து வைத்த நிலையில், இளைஞர்களின் பற்களை சென்றாயன் தரப்பினர் உடைத்துள்ளனர்.
  • இதில், அனைவரும் ஒரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சம்பவம் அறிந்து மருத்துவமனை வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.
  • இதில், தூயமணி, சுப்ரமணி ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தன

Next Story

மேலும் செய்திகள்