"இலவசம்னு சொல்லி Pipe இருக்கு.. ஆனா தண்ணீர் தான் இல்லை.." - கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகள் அவதி

x

தினசரி ஆயிரக் கணக்கானோர் வந்து செல்லும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில், இலவச குடிநீர் குழாயில் தண்ணீர் வராததால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், பேருந்து நிலையத்தில் காலி பாட்டில்களுடன் தண்ணீருக்காக பயணிகள் சுற்றி வருகிறார்கள். விடுமுறை முடிந்து பலர் சென்னை திரும்பும் சூழலில், இலவச தண்ணீர் குழாயை சீரமைத்து அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகளும் ஓட்டுனர்களும் நடத்துனர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்