கத்திப்பாரா மேம்பாலத்தில் கொட்டிய மழையிலும் பற்றி எரிந்த காரால் பரபரப்பு

கத்திப்பாரா மேம்பாலத்தில் கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை, மாடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அஜய். மென்பொருள் பொறியாளரான இவர், இரவு பணி முடிந்து தனது நண்பருடன் காரில் திரும்பிய போது, கத்திப்பாரா மேம்பாலத்தில் கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. காரில் இருந்த இருவரும் உடனடியாக இறங்கினர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com