"சமூகநீதி கோட்பாட்டிற்கு பேராபத்து உருவாகியுள்ளது" - விசிக தலைவர் தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு

x

பெண்களை மனுஸ்மிருதி இழிவுபடுத்துவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டியுள்ளார். பாவலர் தமிழன்பன் எழுதிய சமூகநீதி சமூகங்களின் காவலன் என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா, சென்னையில் விசிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கவிஞர் ஆண்டாள் பிரியதர்சினி நூலை வெளியிட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பெற்றுக் கொண்டார். பின்னர் பேசிய திருமாவளவன், சமூக நீதி என்கிற கோட்பாட்டிற்கு இந்த மண்ணில் பேராபத்து உருவாகி உள்ளது என்று எச்சரித்தார். சமூக நீதி குழு தோண்டி புதைக்கப்பட்டால் பிறகு ஜனநாயகமும் இருக்காது, சமத்துவமும் இருக்காது என்று தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்