"தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த 4 பேர் தான்.." - போலீசில் பெண் அளித்த பரபரப்பு புகார்

x

தயாரிப்பாளர் சங்கத்தைச் சேர்ந்த நான்கு பேர் மீது காயத்திரி என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கத்தின் வழக்கறிஞர் விஜயகுமாரிடம், காயத்திரி என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவரை, சங்கத்தைச் சேர்ந்த ஜம்பு, விஜயராகவ சக்கரவர்த்தி உள்ளிட்ட நான்கு பேர் இழிவான வார்த்தையால் பேசியதாக கூறப்படுகிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, காயத்திரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த்துள்ளார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒரு பெண் என்றும் பாராமல் சங்கததைச் சேர்ந்த ஜம்பு, விஜயராகவ சக்கரவர்த்தி உள்ளிட்ட 4 பேர் தன்னை இழிவான வார்த்தையில் பேசியதாகவும், போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்