"கஷ்டப்பட்டு ரேஷன் கடையில லைன்ல நின்னு அரிசி வாங்கினா.. அது இப்படியா இருக்கனும்..?" பார்த்து அதிர்ந்து போன மக்கள்

x

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே, நியாய விலைக்கடையில் வழங்கப்பட்ட அரிசியில் எலிக்குஞ்சுகள் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பாலசமுத்திரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் நியாய விலைக்கடையில், அதே கிராமத்தைச் சேர்ந்த மோகன் என்பவர் பொருட்களை வாங்கியுள்ளார். அப்போது, அவருக்கு கொடுக்கப்பட்ட அரிசியில், 5 எலி குஞ்சுகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், கடை முன்பு அரிசியை கொட்டி, ரேஷன் கடை பணியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட அரிசியில் எலிக்குஞ்சுகள் இருந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்