தென்பெண்ணை ஆற்றில் வற்றாமல் நீர் ஓட ஆரத்தி எடுத்து பூஜை செய்த மக்கள்

x

தென்பெண்ணை ஆற்றில் வற்றாமல் நீர் ஓட வேண்டும் என்பதற்காக, விழுப்புரத்தில் ஆரத்தி எடுத்து பூஜை நடத்தப்பட்டது.

திருவெண்ணெய்நல்லூர் அருகே ஏனாதிமங்கலம் தென்பெண்ணையாற்றில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஆறுகள் நீர்நிலைகளை வணங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மணலால் ஆன சிவலிங்கத்தை உருவாக்கி சிறப்பு பூஜை அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தப்பட்டது.

சப்த கன்னிமார்களாக பெண்களை பூஜை செய்து, ஆரத்தி எடுத்து, தென்பெண்ணை ஆற்றுக்கு தீபாராதனை காட்டப்பட்டது.

தென்பெண்ணை ஆற்றில் வற்றாமல் நீர் ஓட வேண்டும், மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டும் என பொதுமக்கள் வழிபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்