தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞர்... பைக்கில் இருந்த GPS கருவியால் கையும் களவுமாக சிக்கிய..

x

செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்ந்து இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞரை GPS கருவி மூலம் போலீசார் கைது செய்தனர். மறைமலைநகர் கண்ணகி தெருவை சேர்ந்த தயாளன் என்பவர், தனது இரு சக்கர வாகனம் திருடப்பட்டதாக போலீசில் புகாரளித்துள்ளார். இதில், தயாளனின் இரு சக்கர வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த GPS கருவியால், வாகனம் பீர்க்கங்கரனை பகுதியில் இருப்பது தெரியவந்துள்ளது. இதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த காமராஜ் என்பவரை கைது செய்தனர். விசாரணையில், காமராஜ் தொடர்ந்து வாகன திருட்டில் ஈடுபட்டது தெரியவர, அவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்