காசி விஸ்வநாதர் கோவிலில் திருட்டு..சிசிடிவி கேமராவுக்கு விபூதி அடித்து விட்டு கைவரிசை

x

மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோவிலில், சிசிடிவி கேமராவுக்கு விபூதி அடித்து, கோவிலில் இருந்த பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். தென் திருக்கைலாயம் என்று அழைக்கப்படும் அந்த கோவிலில், இரவு நேரத்தில் புகுந்த மர்ம நபர்கள், இரும்பு பீரோவை உடைத்து திருடிச் சென்றுள்ளனர். மேலும், அங்குள்ள சிசிடிவி கேமரா மீது விபூதி அடித்து விட்டு, கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் பாகத்தையும் எடுத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்