வீட்டு வாசற்படியிலேயே... "சட்டையை வச்சி முகத்தை மூடி..." - விக்ரமன் வீட்டிலேயே கைவைத்த இளைஞர்கள் - நடந்தது என்ன..?

x

குடும்ப பாங்கான திரைப்படம் எடுத்து தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்த இயக்குநர் விக்ரமனின் வீட்டில் இரு சக்கர வாகனம் திருடு போயுள்ளது..

குடும்ப உறவுகளையும், உறவுகளின் பாசத்தையும் திரைப்பட வாயிலாக கடத்தி மக்களின் மனதை கொள்ளையடித்தவர் இயக்குநர் விக்ரமன்....

கணவன்-மனைவி உறவுக்கு சூர்யவம்சம், அண்ணன்-தம்பிக்கு வானத்தை போல, ஆண்-பெண் இடையிலான நட்புக்கு பிரியமான தோழி, காதலின் 'அதீத அன்பை உச்சி முகர்ந்த பூவே உனக்காக.... என சொல்லிக் கொண்டே போகலாம்...

இப்படி 90ஸ் கிட்ஸ்கள் முதல் தற்போது உள்ள 2கே கிட்ஸ்சுகளுக்கும் பேவரைட் இயக்குநர் என்றே சொல்லலாம்...

இன்றளவும் தொலைக்காட்சியில் சூர்யவம்சம் திரைப்படம் திரையிடப்பட்டால் தமிழகமே டிவிக்கு முன்புதான்...

இப்படி அனைவரது மனதையும் விக்ரமன் கிறங்கடித்த நிலையில், அதில் கரையாத கல்நெஞ்சக்காரரான இருவர் விக்ரமனின் வீட்டில் திருடிய சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது...

சென்னை, அசோக் நகர் 53 ஆவது தெருவில் வசிக்கும் விக்ரமனின் வீட்டுக்கு, சம்பவத்தன்று அவரது மனைவியின் சகோதரி மகள் இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார்...

வாகனத்தை வீட்டின் வெளியே நிறுத்திவிட்டு அவர் உள்ளே சென்ற நிலையில், வாட்ச்மேனின் கண்ணில் மண்ணை தூவி இரு இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தை திருடி சென்றுள்ளனர்....

வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சியடைந்த விக்ரமன், வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை சோதனை செய்துள்ளார்... அப்போது இருவர் பைக்கை திருடி செல்வது பதிவாகியிருந்த நிலையில், போலீசில் புகாரளித்தார்...

இரு இளைஞர்கள் வாகனத்தை திருடி செல்வதை சிசிடிவி ஆதாரத்துடன் வெளியிட்டு விக்ரமன் போலீசில் புகாரளித்த நிலையில், இரு இளைஞர்களையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்...




Next Story

மேலும் செய்திகள்