15க்கும் மேற்பட்ட கடைகளில் திருட்டு...வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி

x

15க்கும் மேற்பட்ட கடைகளில் திருட்டு...வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி

நீலகிரி சந்தையில் 15க்கும் மேற்பட்ட கடைகளின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் உதகை மையப்பகுதியில் தினசரி நகராட்சி சந்தை செயல்பட்டு வருகிறது.

இங்கு சுமார் 1700 க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன.

நேற்று நள்ளிரவில் 15க்கும் மேற்பட்ட கடைகளில் மர்ம நபர் ஒருவர், கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்.

இதுக்குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையனை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்