ஆடு திருடிய இளைஞர்கள்...பலி கடாவான நண்பர்கள் - புரட்டி எடுத்த பொதுமக்கள்

x

சிவகங்கை மாவட்டம் அரியக்குடியில், ஆடு திருடியவர்களின் நண்பர்களுக்கு அந்த கிராம இளைஞர்கள் தர்ம அடி கொடுத்தனர்.

அரியக்குடியில் இருந்து சில இளைஞர்கள் ஆடுகளை திருடி கொண்டு பைக்கில் சென்றுள்ளனர்.

அவர்களை துரத்தி கொண்டு, அந்த கிராம இளைஞர்கள் சென்றுள்ளனர்.

அப்போது, திருடர்கள் சென்ற வாகனம் பெட்ரோல் இல்லாமல் நிற்க, நண்பர்களுக்கு அழைத்து, பெட்ரோல் எடுத்து வர சொல்லியுள்ளனர்.

அப்போது அங்கே சென்ற கிராம இளைஞர்கள் நண்பர்களை பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர்.

இதனிடையே ஆடு திருடிய நபர்கள் தலைமறைவாகிய நிலையில், போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்