மதுபானக்கடையை சூறையாடிய இளைஞர்கள்... கோவில் அன்னதானம் வழங்கியதில் ஏற்பட்ட தகராறு

x

புதுச்சேரி அருகே மதுபானக்கடையில் பணிபுரியும் இளைஞர்கள் சிலர், அங்காளம்மன் கோவிலில் அன்னதானம் வழங்கியதாக கூறப்படுகிறது.

அப்போது லிங்காரெட்டிபாளையத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர், அன்னதானத்தில் சாப்பிட சென்றபோது உணவு தீர்ந்து விட்டதாக கூறப்பட்டுள்ளது.

இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து லிங்காரெட்டிபாளையத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர், மதுபானக்கடையின் உள்ளே புகுந்து அடித்து நொறுக்கி, பல பொருட்களை சூறையாடினர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகள் மூலம் சூறையாடியவர்களை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்