தகராறை தடுக்க வந்த பெண்ணை சரமாரியாக தாக்கிய இளைஞர்கள்

தகராறை தடுக்க வந்த பெண்ணை சரமாரியாக  தாக்கிய இளைஞர்கள்

மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட இளைஞர்கள்

பெண்ணை தாக்கிய விவகாரத்தில் 3 பேர் கைது

தப்பியோடிய 3 இளைஞர்களுக்கு வலைவீச்சுதகராறை தடுக்க வந்த பெண்ணை சரமாரியாக தாக்கிய இளைஞர்கள்

மதுரை சோழவந்தான் அருகே, மதுபோதையில் பெண்ணை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சோழவந்தான் அடுத்துள்ள வடகாடுபட்டியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் மதுபோதையில், சாலையில் சென்றவர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். அதனை தடுக்க வந்த பெண்ணை கம்பு, கட்டை மற்றும் கல்லால் அடித்து உதைத்தனர். இதுகுறித்த பரபரப்பு வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், பெண் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். தாக்குதலில் ஈடுபட்ட வடகாடுபட்டி பகுதியை சேர்ந்த சேகர், அவரது மனைவி சித்ரா, தமிழ்வாணன் ஆகியோரை கைது செய்த போலீசார், தப்பியோடிய 3 இளைஞர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவத்தில் காயமடைந்த சிந்தாமணி என்பவர், சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்