சிக்கன் 65-ல் புழு... கொதித்த குடும்பம்.. கடைக்காரரை left&right வாங்கிய குடும்ப தலைவி

x

கேரள மாநிலம், திருச்சூர் அருகே தெருவோர கடையில் வாங்கிய சிக்கன் வறுவலில் புழு இருந்ததால், குடும்பமே சென்று கடைக்காரருடன் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சூரை அடுத்த சாலக்குடியில் தெருவோர தட்டுக்கடையில், தளிக்குளம் பகுதியை சேர்ந்த ஜித்து ஜோசப் தனது நான்கு வயது மகனுக்கு சிக்கன்-65 பார்சலில் வாங்கி சென்றார். வீட்டிற்கு சென்று திறந்து பார்த்தபோது அதில் புழுக்கள் இருந்தது. அதிர்ச்சி அடைந்த ஜித்து ஜோசப் தன் குடும்பத்தினருடன் கடைக்கு சென்று தகராறில் ஈடுபட்டார். மேலும், உணவு பாதுகாப்புத் துறைக்கும் அவர் புகார் அளித்தார். இதையடுத்து, விரைந்து சென்ற உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், அந்த கடையை மூடச் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்