கொரோனாவுக்கு முடிவு.. ஆனால் ஷாக் கொடுத்த உலக சுகாதார அமைப்பு

x

கோவிட் தொற்றின் அவசர நிலை முடிவுக்கு வந்ததாக, உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் கொரோனா அவசர கால கூட்டம், 15-வது முறையாக கூடியது. அப்போது, கொரோனா தொற்றின் வீரியம் குறைந்து இருப்பதாகவும், உலக நாடுகளில் இதனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் குறைந்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டது. இதனைக் கருத்திற் கொண்டு, கோவிட் தொற்றின் அவசர கால நிலை முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், கொரோனா முற்றிலும் முடிந்து விட்டதாக கருத வேண்டாமெனவும், கடந்த வாரம் வரை கொரோனா தொற்றின் பாதிப்பு மூலம், 3 நிமிடங்களுக்கு ஒரு உயிரிழப்பு பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்