கத்தாரில் நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டி - இந்தியாவிலும் நடத்தப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை..பிரதமர் மோடி உரை

x

கத்தாரில் நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டியை போல் இந்தியாவிலும் நடத்தப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் நடைபெற்ற வடகிழக்கு மாநிலங்களின் கவுன்சில் பொன்விழா கொண்டாட்டங்களில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து போட்டியை இந்தியர்கள் உற்று பார்த்து கொண்டிருப்பதாக கூறினார். கால்பந்து போட்டியில் ரெட் கார்ட்டு கொடுக்கப்படுவது போல வட கிழக்கு மாநிலங்களிலும் வளர்ச்சிக்கு தடையாக இருந்த சில கட்சிகளுக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி நகைச்சுவையாக குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்