நடிகை வீட்டில் வேலை பார்த்த தொழிலாளி..! 10 கோடிக்கு அதிபதியான அதிசயம் -ஒரே இரவில் அடித்தது அதிர்ஷ்டம்

x

கேரள நடிகை ரஜினி சாண்டியின் வீட்டில் வேலை பார்த்து வந்த அசாமைச் சேர்ந்த தொழிலாளருக்கு லாட்டரியில் 10 கோடி ரூபாய் கிடைத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது...

கொச்சியிலுள்ள நடிகை ரஜினி சாண்டியின் வீட்டில் பல ஆண்டுகளாக வீட்டு வேலை செய்து வருபவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஆல்பர்ட் டிகாவு... இவர் கேரள அரசின் 250 ரூபாய் கோடைக்கால பம்பர் லாட்டரியை வாங்கி இருந்தார். இந்நிலையில், அவருக்கு குலுக்கலில் முதல் பரிசாக 10 கோடி ரூபாய் கிடைத்துள்ளது... வரி உள்ளிட்ட பிடித்தம் போக ஆல்பர்ட் டிகாவுக்கு சுமார் ஆறரை கோடி ரூபாய் கிடைக்கும்... இந்நிலையில், தனது வீட்டில் வேலை பார்த்த நபருக்கு கோடிக்கணக்கில் லாட்டரி பரிசு கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக ரஜினி சாண்டி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்