விவசாய நிலத்தை அழித்து கல்குவாரி அமைக்கும் பணி? - கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி விவசாயிகள் போராட்டம்

x

விவசாய நிலத்தை அழித்து கல்குவாரி அமைப்பதாகவும், பல வருடங்களாக விவசாயம் செய்து வரும் நிலத்திற்கு உடனடி பட்டா வழங்க கோரியும் கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி நூதன முறையில் போராட்டம் நடத்தப்பட்டது. திண்டுக்கல் குன்னத்துப்பட்டியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட தாழ்ந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள் 50 வருடங்களுக்கும் மேலாக விவசாயம் செய்து வரும் நிலங்களை 50 லட்சம் ரூபாய்க்கு கல்குவாரிக்கு ஏலம் எடுத்து விட்டதா ரவிக்குமார் என்பவர் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து போலீசில் புகாரளித்தும் 3 ஆண்டுகளாக மிரட்டல் தொடர்ந்து வருவதாகக் கூறி ஆட்சியர் அலுவலகம் முன்பாக கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி நூதன முறையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்