அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை... ரூ.1.22 கோடியை சுருட்டிய பைனான்சியர் - எஸ்கேப் ஆன மனைவி

x

கரூரை சேர்ந்த தம்பதி கிருஷ்ண மூர்த்தி மற்றும் மணிமேகலை. இருவரும் நிதி நிறுவனம் நடத்தி வந்த நிலையில், தங்களிடம் பணம் டெபாஸிட் செய்தால், அதிக வட்டி தருவதாக கூறி விளம்பரம் செய்துள்ளனர். இதை நம்பி, நர்மதா என்பவர் சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமான பணத்தை நிறுவனத்தில் மூதலீடு செய்துள்ளார். இதில், முதலீடு செய்த பணத்தை இருவரும் திருப்பி கொடுக்காமல் இழுத்தடித்து வந்த நிலையில், நர்மதா போலீசில் புகாரளித்துள்ளார். இதனடிப்படையில், விசாரணை நடத்திய போலீசாருக்கு, நிறுவனத்தில் பண முதலீடு செய்த 27 பேரிடம் சுமார் 1 கோடியே 22 லட்சம் வரையில் பணம் மோசடி செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில், கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார், அவரது மனைவியை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்