அடுக்கடுக்கான கேள்வி கேட்ட பெண்கள்... கூட்டத்தை அவசரமாக முடித்து புறப்பட்ட எம்.பி

x

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே, அடிப்படை வசதிகள் செய்துதரவில்லை எனக் கூறி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமியிடம் பெண்கள் கேள்வி எழுப்பினர். ஜம்புதுரைக்கோட்டை ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில், ஜல்லிபட்டி, ஜெ.ஊத்துப்பட்டியைச் சேர்ந்த பெண்கள் தங்கள் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்துதரப்படவில்லை என்று திமுக எம்.பி. வேலுச்சாமியிடம் கேள்வி எழுப்பினர். அவர் சமாதானப்படுத்த முயற்சி செய்தபோது, பெண்கள் தொடர்ந்து கேள்வி கேட்டுக் கொண்டே இருந்ததால், வேலுச்சாமி கூட்டத்தை அவசரமாக முடித்துக்கொண்டு புறப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்