கண்டக்டரை வழி விட சொன்ன பெண்... அடிப்பது போல் பாய்ந்து வந்து அசிங்கமாக திட்டிய டிரைவர்

x

ஈரோடு மாவட்டம் பவானியில் பெண் பயணியை தகாத வார்த்தையில் பேசிய தனியார் பேருந்தின் ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க சக பயணிகள் வலியுறுத்தி உள்ளனர். பவானி பேருந்து நிலையத்திற்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான அரசு மற்றும் தனியார் பேருந்து வந்து செல்லும் நிலையில் ஏராளமானோர் பயணிக்கிறனர். இந்நிலையில், தனியார் பேருந்து ஓன்றில் பெண் பயணி ஏறும் போது, வழி விடுங்கள் என நடத்துனரிடம் கூற வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, இருக்கையில் இருந்து எழுந்த வந்த அப்பேருந்தின் ஓட்டுநர், பெண் பயணியை தகாத வார்த்தைகளில் திட்டியது சக பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்