கோயிலில் திடீரென மயங்கி விழுந்த பெண்.. - ஆளுநரே முன்வந்து முதலுதவி - நெகிழ்ச்சி செயல்

x

கோயிலில் மயங்கி விழுந்த பெண்ணுக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் முதலுதவி சிகிச்சை அளித்தார். கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் மாசி பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் கலந்து கொண்ட நாகர்கோவில் மாநகராட்சி முன்னாள் தலைவர் மீனாதேவ் திடீரென மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் கோயில் வளாகத்தில் உள்ள மேலாளர் அறைக்கு அழைத்து சென்றனர். அப்போது கோயிலில் இருந்த புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மீனாதேவிற்கு முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்நிகழ்வு அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடைய செய்தது.


Next Story

மேலும் செய்திகள்