கூலிப்படையை ஏவி அதிமுக பிரமுகரை கொலைசெய்த பெண்

x

சென்னை அடுத்த கூடுவாஞ்சேரியில் வெட்டப்பட்ட அதிமுக பிரமுகர் தனியார் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பெருமாட்டுநல்லூர் பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் செந்தில்குமார்‌ என்பவரை, கடந்த 21ஆம் தேதி சிலர் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த கூடுவாஞ்சேரி போலீசார், சென்னை ஜே.ஜே நகரைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், கொடுத்த பணத்தை கேட்டதற்காக உறவினர் என்றும் பாராமல் கூலிப்படையை ஏவி கொலை செய்ய திட்டமிட்டது தெரியவந்தது. இதனிடையே, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


Next Story

மேலும் செய்திகள்