மழையுடன் சூறாவளியாக சுழன்றடித்த காற்று.. ஓரமாக ஒதுங்கிய பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

x

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே சார்வாய் புதூரை சேர்ந்த செல்வி என்பவர் ஆடு மேய்த்து கொண்டிருந்த நிலையில், பலத்த மழை பெய்ததால், ஹாலோ பிளாக் கல்லால் கட்டப்பட்ட வீட்டின் அருகே ஒதுங்கியுள்ளார். தொடர்ந்து , சூறாவளியுடன் கூடிய பலத்த காற்று வீசியதில் சுவர் இடிந்து செல்வியின் தலை மீது விழுந்ததில், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஒரு ஆட்டுக்குட்டியும் உயிரிழந்த நிலையில், சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்