திடீர் ரெய்டில் சிக்கிய வார்டன்.. வெளுத்து வாங்கிய MLA வேல்முருகன் அடங்கிய குழு

x

நாகை மாவட்டம் மேலக்கோட்டை வாசலில் உள்ள ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியினையினை, எம்எல்ஏ வேல்முருகன் தலைமையிலான சட்டப்பேரவை உறுதிமொழிக்குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது குழுவினரிடம் மாணவர்கள், தாங்கள் உப்பு தண்ணியில் குளிப்பதாகவும், பக்கெட், குவளை இன்றி தவித்து வருவதாகவும் புகார் தெரிவித்தனர். தொடர்ந்து விடுதியில் ஆய்வு செய்த உறுதிமொழிக்குழுவினர், கழிவறையில் கதவுகள் இல்லாமலும், அசுத்தமாகவும் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுதொடர்பாக ஆதி திராவிட நலத்துறை அலுவலரையும், விடுதி வார்டனையும் கடிந்துகொண்ட எம்எல்ஏ வேல்முருகன், உறுதிமொழிக்குழு நாகையிலிருந்து செல்வதற்குள், மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து முடிக்க அறிவுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்