வெள்ளியங்கிரி மலைக்கு சென்ற தன்னார்வலர் மாயம்.. ஈஷா யோகா மையம் போலீசில் புகார்

x

தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் கணேசன் என்ற சுவாமிபவத்துதா. இவர் கடந்த ஈஷா யோக மையத்தில் தங்கி இருந்து, தன்னார்வ தொண்டு செய்து வருகிறார்‌. கடந்த மாதம் 28ம் தேதி, ஈஷா யோக மையத்தில் இருந்து புறப்பட்டு, வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள பூண்டி கோவிலுக்கு சென்றுள்ளார். ஆனால், 3 நாள் ஆகியும் ஈஷா யோக மையத்திற்கு திரும்பி வரவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து, ஈஷா யோக மையம் தரப்பில், அவரது உறவினர்களிடம் கேட்டபோது, யாரையும் தொடர்புகொள்ளவில்லை என தெரியவந்தது. காணாமல் போன கணேசனை கண்டுபிடித்து தருமாறு, ஈஷா யோக மையம் சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்