நாடு முழுக்க அதிர்ச்சியை கிளப்பிய வீடியோ - கொடூரத்தை அரங்கேற்றியவர்கள் கைது

x

மணிப்பூரில் பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடூர சம்பவம் தொடர்பாக, மேலும் 3 பேரை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.

மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி சமூகத்தினருக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவது தொடர்பான விவகாரத்தில், மைத்தேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக மாறியது. ஏறத்தாழ 2 மாதங்களை கடந்தும் கலவரம் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், கடந்த மே மாதம் 4 ம் தேதி இளம் பெண் இருவரை, ஒரு கும்பல் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்றதோடு பாலியல் அத்துமீறலுக்கும் உட்படுத்திய சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி, நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக, ஹெரோதாஸ்

என்ற நபரை ஏற்கனவே போலீசார் கைது செய்த நிலையில், தற்போது மேலும் மூன்று பேரை கைது செய்துள்ளனர்....


Next Story

மேலும் செய்திகள்