வேகத்தை காட்ட எடுத்த வீடியோ... அதுவே இறுதி நிமிடமாக பதிவானது.. அதிர்ச்சி காட்சிகள்

x

சென்னை தரமணியில், லோடு வேனில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் மாணவர்கள் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

தரமணியை சேர்ந்த கல்லூரி மாணவர் பிரவீன் வாகனத்தை ஓட்ட, 12ஆம் வகுப்பு மாணவர் அரிகரன் பின்னால் அமர்ந்து, வாகனம் எவ்வளவு வேகமாக செல்கிறது என்பதை வீடியோ பதிவு செய்துள்ளார்.

அப்போது, எஸ்.ஆர்.பி. டூல்ஸ் பகுதியில் லோடு வேன் திரும்பிய நிலையில், அதில் இருசக்கர வாகனம் மோதியுள்ளது.

இதில், பலத்த காயமடைந்த மாணவர்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இந்நிலையில், போலீசார் வேன் ஓட்டுநரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்