தமிழகத்தை அதிர செய்த கோகுல்ராஜ் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு

x

கோகுல்ராஜ் ஆணவ கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்டோரின் மேல்முறையீட்டு மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது

ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் கடந்த 2015 -ல் ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கில், மதுரை நீதிமன்றம் தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து 10 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்தனர்.

அதேபோல, வழக்கில் இருந்து ஐந்து பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கோகுல் ராஜின் தாயாரும் மேல்முறையீடு செய்தார். இதனிடையே, அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் மனுக்கள் மீதான தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் கடந்த பிப்ரவரி மாதம் ஒத்திவைத்தனர். இந்நிலையில், இந்த வழக்குகளில் இன்று பிற்பகலில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது


Next Story

மேலும் செய்திகள்