சிக்னலில் நின்று கொண்டிருந்த வாகனங்கள்... பின்னாலே வேகமாக வந்த தனியார் பேருந்து - அடுத்த நொடியே அரங்கேறிய சம்பவம்

x

சிக்னலில் நின்று கொண்டிருந்த வாகனங்கள்... பின்னாலே வேகமாக வந்த தனியார் பேருந்து - அடுத்த நொடியே அரங்கேறிய சம்பவம்

நெல்லை மாவட்டம், கொக்கிரகுளம் பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள, சிக்னலில் வாகனங்கள் நின்று கொண்டிருந்தன. அப்போது, வேகமாக வந்த தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, கார், ஆட்டோ மற்றும் அரசு பேருந்து மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில், ஆட்டோ ஓட்டுநர் மற்றும் ஆட்டோவில் இருந்த பயணிகள் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், 108 ஆம்புலன்ஸ் வர தாமதமானதால், தனியார் ஆம்புலன்ஸில் காயமடைந்தவர்களை அனுப்பி வைத்தனர். இதனிடையே விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை பிடித்து, போலீசாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் பேருந்தை இயக்கியது தெரியவந்தது. போலீசார், மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்