காதலிக்கு திருமணமாகிறது என நினைத்த போதை காதலனுக்கு காத்திருந்த ட்விஸ்ட் - கன்னியாகுமரியில் நடந்த வினொத சம்பவம்

x

கன்னியாகுமரியில், காதலிக்கு திருமணம் நடைபெறுவதாக கருதி, மதுபோதையில் காதலியின் உறவினர் திருமண வீட்டில் ரகளையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மது போதையில் டெம்போ டிரைவர் சபின், காதலியின் உறவினர் திருமண வீட்டில் சென்று, தனக்கு பெண் தருமாறு காதலியின் பெற்றோரிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில் அங்கு சென்ற போலீசார் அவரை எச்சரித்துள்ளனர். அதை பொருட்படுத்தாமல் போலீசாரிடம் சபின் வாக்குவாதம் செய்த காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவியது. இதையடுத்து தங்களை கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரில் டெம்போ டிரைவர் சபீன் மீது பெண் வன்கொடுமை சட்டம், கொலை முயற்சி உள்பட 4 பிரிவில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்