கடும் நடவடிக்கையில் இறங்கிய துருக்கி அரசு... நாட்டை விட்டு தப்பியோடும் கட்ட‌ட வடிவமைப்பாளர்கள்

x

துருக்கியில் கட்ட‌டங்கள் விழுந்து தரைமட்டமானதற்கு காரணமாக சந்தேகிக்கப்படும் நபர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

நிலநடுக்கம் என்ற பேரிடரால் கட்ட‌டங்கள் சரிந்து விழுந்திருந்தாலும், முழுமையாக கட்ட‌டங்கள் விழுந்த‌தற்கு வடிவமைப்பாளர்களே பொறுப்பு என கூறப்படுகிறது.

இதுகுறித்து முழுமையாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், கட்ட‌ட வடிவமைப்பாளர்கள் பலர் வெளி நாடுகளுக்கு தப்ப முயற்சிப்பதால், விமான நிலையங்களில் வைத்து போலீசார் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

மேலும், கட்ட‌டங்கள் தரைமட்டமானதற்கு பொறுப்பானவர்களாக கருதப்படும் நபர்கள் 131 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்