தனிமையில் வாழ்ந்து வந்த மதபோதகர் விபரீத முடிவு...தூத்துக்குடியில் பரபரப்பு

x

தூத்துக்குடியில் குடும்பத்தை பிரிந்து தனிமையில் வாழ்ந்து வந்த மதபோதகர் ஒருவர், பூட்டிய அறைக்குள் உடலில் தீவைத்து தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில் வசித்து வந்தவர் ஜெயபாண்டியன்.

மதபோதகரான இவர் குடும்ப பிரச்சினை காரணமாக மனைவி மற்றும் குழந்தைகளைப் பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் அவரது வீட்டில் ஜன்னலில் இருந்து புகை வந்ததால், அருகில் இருந்த‌வர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

அங்கு வந்த காவல்துறையினர், க‌தவை உடைத்து உள்ளே சென்ற போது தீயில் கருகிய நிலையில் ஜெய பாண்டியன் சடலமாக கிடந்துள்ளார்.

உடலைக் கைப்பற்றிய போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்