100 நாள் வேலை செய்யும் போது மது பாட்டிலால் பெண்ணுக்கு நேர்ந்த சோகம் - அதிர்ச்சியில் கணவன்..!

x

வேலூர் அருகே 100 நாள் வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண்ணின் காலில், மதுபாட்டில் குத்தியதில் அவரது காலில் நரம்பு துண்டிக்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.வேலூர் மாவட்டம், குடிசை கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணியாற்றி வருபவர் ராதிகா. இவர், கடந்த சில நாள்களுக்கு முன்பு பணியில் இருந்த போது, உடைந்த மது பாட்டில் இவரது காலில் குத்தியதில் பலத்த காயமடைந்தார். அவரை மீட்ட சக பணியாளர்கள், மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கண்ணாடி பாட்டில் ஆழமாக குத்தியதால் கால் நரம்பு துண்டிக்கப்பட்டதாகக் கூறி, உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளனர். இதனிடையே, படுகாயமடைந்த ராதிகாவின் கணவர், தங்களுக்கு 4 குழந்தைகள் இருப்பதாகவும், இதனால் தங்கள் வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்