தாலியின் ஈரம் காய்வதற்குள் நடந்த கோரம்.. தேனிலவில் சென்னை டாக்டர் ஜோடி பலி.. கடைசி போட்டோசூட்டாக அமைந்த சோகம் - இந்தோனேசியாவில் பயங்கரம்

x

இந்தோனேசியாவிற்கு தேனிலவு சென்ற பூந்தமல்லியை சேர்ந்த புதுமண டாக்டர் தம்பதிகள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியை சேர்ந்த மருத்துவர்களான விபூஷ்னியா மற்றும் லோகேஸ்வரன் ஆகியோருக்கு கடந்த ஜூன் ஒன்றாம் தேதி திருமணம் நடைபெற்றது. தேனிலவு கொண்டாட இருவரும் இந்தோனேஷியா சென்ற நிலையில், கடல் பகுதியில் போட்டோ ஷூட் நடத்தியபோது எதிர்பாராவிதமாக கடலில் மூழ்கி இருவரும் உயிரிழந்துள்ளனர். லோகேஸ்வரனின் உடல் மீட்கப்பட்ட நிலையில், விபூஷ்னியாவின் உடலை இந்தோனேசியா போலீசார் தேடி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து தகவலறிந்த இருவரின் உறவினர்களும் கதறி அழுதனர். இதையடுத்து இருவரது சடலத்தையும் சென்னைக்கு கொண்டுவர மத்திய அரசும், தமிழக அரசும் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்