"மருத்துவமனையில் டாக்டர் இல்லாத அவலம்" "செவிலியர்கலே பிரசவம் பார்த்த விபரீதம்" - தாய், சேய் உயிரிழந்த சோகம்

x

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிரசவத்தில் தாய், சேய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் வ.புதுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், அரங்கநாயகி என்பவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்து இறந்த நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அரங்கநாயகி மேல் சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதனிடையே, அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், அதிர்ச்சி அடைந்த அவரின் உறவினர்கள், மருத்துவமனையை முற்றுகையிட்டு கதறி அழுதனர். மருத்துவமனையில் போதுமான அளவில் மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லை எனவும், மருத்துவர் இல்லாமல் செவிலியர் மட்டும் பிரசவம் பார்த்ததால்தான் தாய், சேய் உயிரிழந்ததாகவும் உறவினர்கள் குற்றம்சாட்டினர். இதனிடையே, அங்கு வந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்