திடீரென கழன்று ஓடிய டயர்... அரை கி.மீ சக்கரமின்றி சென்ற பேருந்து.. சாமர்த்தியமாக செயல்பட்ட ஓட்டுநர்

x

கேரள மாநிலம், பாலக்காடு அட்டப்பாடியில் ஓடி கொண்டிருந்த அரசு பேருந்தின் பின்பக்க ஆக்சில் திடீரென உடைந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த பேருந்தில் பயணித்த பயணிகள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசுப்பேருந்து அட்டப்பாடி கூனிக்கடவு என்ற இடத்தில் வந்த போது பேருந்தின் ஆக்சில் உடைந்து தனியாக வந்தது. இதில் பேருந்து திடீரென ஒரு புறமாக சாய்ந்த நிலையில், ஓட்டுநர் சாதூர்யமாக ஒட்டி ஒரு இடத்தில் நிறுத்தினார். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்