காவலரிடமே கைவரிசை காட்டிய திருடன்.. வங்கி கணக்கிலிருந்து பணம் அபேஸ் கடுப்பாகிய போலீசார்.. Ponneri

x

சென்னை, புழல் சிறையில் காவலராக பணியாற்றி வருபவர் ஜெயசீலன். இவரது செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பிய மர்மகும்பல், ஜெயசீலனின் வங்கி கணக்கு காலாவதியாகி விட்டதாகவும், அதனால் பான்கார்டு உள்ளிட்ட விவரங்களை பதிவேற்றம் செய்யும் படியும் கூறியுள்ளனர். இதனை நம்பிப்போன ஜெயசீலன், குறுஞ்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்த லிங்கினுள் சென்று விவரங்களை பதிவு செய்திருக்கிறார். இதில், தனது செல்போன் எண்ணிற்கு வந்த OTPஐ ஜெயசீலன் பதிவேற்றம் செய்தபோது, அவரது வங்கி கணக்கில் இருந்து பதிமூன்றாயிரம் ரூபாய் வரையிலான பணம் எடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து ஜெயசீலன் அளித்த புகாரின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் மற்றும் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்