பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம்... "பல்வீர் சிங் மீதான வழக்கை திரும்ப பெறாததால் கைது" - பரபரப்பு குற்றச்சாட்டு

x

அம்பாசமுத்திரத்தில் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, வழக்கறிஞர் மகாராஜன் கைது செய்யப்பட்டது மனித உரிமை மீறல் என, சமூக நீதி கூட்டமைப்பினர் குற்றஞ்சாட்டினர். பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில், பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவாக போராடிய வழக்கறிஞர் மகாராஜன் கைது செய்யப்பட்டது குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு சமூக நீதி கூட்டமைப்பு சார்பில், ரெட்டியார்பட்டியில் நடைபெற்றது. அப்போது பேசிய புரட்சி பாரத கட்சியின் மாவட்ட செயலாளர் நெல்சன், ஏஎஸ்பி பல்வீர் சிங் மீதான புகார்களை ரத்து செய்தால், வழக்கறிஞர் மகாராஜனை விடுப்பதாக தென்காசி எஸ்.பி., கூறியதாகவும், இதற்கு மறுப்பு தெரிவித்ததால் அவர் கைது செய்யப்பட்டதாகவும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்