குடித்த டீக்கு பணம் கேட்ட டீ மாஸ்டர்... | போதை ஆசாமி செய்த பகீர் சம்பவம்

x

ஆத்தூர் அருகே குடித்த டீக்கு பணம் தர மறுத்த போதை ஆசாமி, கொதிக்கும் தண்ணீர் பாய்லரை கீழே தள்ளிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. புத்திரக் கவுண்டம்பாளையத்தில் உள்ள டீக்கடையில் கண்ணன் என்பவர் டீ குடித்துள்ளார். குடித்த டீக்கு கண்ணணிடம் டீ மாஸ்டர் சரவணன் பணம் கேட்டுள்ளார். ஆனால், மது போதையில் இருந்த கண்ணன் பணம் தர மறுத்து, வாக்குவாதம் செய்ததோடு, அங்கிருந்த பொருட்களை கீழே தள்ளி உள்ளார். கொதிக்கும் பாய்லரையும் அவர் தள்ளிவிட்ட நிலையில், சற்று தூரத்தில் இருந்ததால் டீ மாஸ்டர் தப்பித்தார். வீடுகளின் மீது ஏறியும் அந்த போதை ஆசாமி ரகளை செய்த நிலையில், அவரைப் பிடித்து போலீசாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்