கோயில் காளை திடீர் மரணம்.. கதறி கதறி அழுத பெண்கள் - ஊரே திரண்டு இறுதி ஊர்வலம்

x

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கோயில் காளை இறந்ததால், பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

ஒழுகமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள வரம் வழங்கி அம்மன் கோயிலுக்கு சொந்தமான, வரதன் என்ற காளை உடல்நலக்குறைவால் இறந்தது. கிராமத்து நாட்டார்கள் சார்பில், காளைக்கு மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். முக்கிய வீதிகள் வழியாக டிராக்டர் மூலம் காளை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, கோயில் அருகில் உள்ள ஊரணி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்