வாழ்வியலை ஓவியங்களாக தீட்டிய மாணவிகள்.. ஆச்சரியத்தில் ஆழ்ந்து பார்த்த கலக்டெர்

x

நாகை அருகே உண்டு உறைவிடப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள், வாழ்வியலை ஓவியங்களாக தீட்டி அசத்தியுள்ளனர். அங்குள்ள கீழக்கரையிருப்பில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பூம், பூம் மாட்டுக்கார பிள்ளைகளுக்காக, உண்டு உறைவிடப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்த பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளின் திறனை மேம்படுத்தும் வகையில் ஓவியக்கலை கண்காட்சி நடத்தப்பட்டது. மாணவ மாணவிகள் வரைந்து காட்சிக்கு வைக்கப்பட்ட இந்த கண்காட்சியினை, நாகை மாவட்ட உதவி ஆட்சியர் ரஞ்சித் சிங் பார்வையிட்டு தொடங்கி வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்