தந்தையை சுத்தியலால் தாக்கி வீட்டை சூறையாடிய மகன்...போலீஸ் ஸ்டேஷன் முன்பு நடந்த பயங்கரம்

x

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே எஸ்.குரும்ப பட்டியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் சரவணன். இவருக்கு முதலில் பிரியா என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதில், இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், சரணவன் திடீரென வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த பெருமாள், மகனை தட்டிக்கேட்ட நிலையில், இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், தந்தையின் வீட்டினுள் புகுந்த சரவணன், வீட்டை சூறையாடி, தந்தை மற்றும் மனைவியை தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், மகன் மீது போலீசில் புகாரளிக்க சென்ற தந்தையை, காவல்நிலையம் முன்பு வைத்தே சரவணன் சுத்தியலால் தாக்கி தப்பி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முதியவர் பெருமாளை மீட்டு அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், தப்பியோடிய அவரது மகனை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்