மாமனாரை துப்பாக்கியால் சுட்ட மருமகன்.. சுருண்டு விழுந்து உயிரிழந்த மாமனார் | Pudhukottai

x

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள வடுகப்பட்டியை சேர்ந்தவர் சைவராஜ். இவருடைய மருமகன் ரவிச்சந்திரன் இவர் முன்னாள் ராணுவ வீரர் ஆவார். இருவருக்கும் இடையே சொத்து பிரச்சனை இருந்து வந்ததால் பல முறை சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வெள்ளியன்று இரவும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மருமகன் ரவிச்சந்திரன், மாமனார் சைவராஜை, தமது துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதனால் அலறியபடி கீழே விழுந்த சைவராஜ், சம்பவ இடத்திலேயே பலியானார். துப்பாக்கியால் சுடும் சத்தத்தை கேட்ட, அக்கம் பக்கத்தினர் ரவிச்சந்திரனை பிடித்து வைத்து, கந்தர்வகோட்டை போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, முன்னாள் ராணுவ வீரர் ரவிச்சந்திரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சைவராஜின் உடலை கைப்பற்றிய போலீசார், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்