சாலையில் சென்று கொண்டிருந்த மாமனாரை துப்பாக்கியால் சுட்டு கொன்ற மருமகன்

x

கந்தர்வக்கோட்டை அருகே வடுகுபட்டியை சேர்ந்தவர் சரண்யா.

இவருக்கு ரவிச்சந்திரன் என்பவருடன் திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளனர்.

ரவிச்சந்திரன் ரானுவத்தில் இருந்து ஓய்வு பெற்று வங்கியில் காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 8 மாதங்களாக சரண்யாவும், ரவிச்சந்திரனும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்துள்ளனர்.

இதனால் விவகாரத்து கேட்டு இருவரும் நீதிமன்றத்தை நாடியதில், திருமணமாகாத இரண்டாவது மகளை தன்னிடம் அனுப்பி வைக்குமாறு ரவிச்சந்திரன் நீதிமன்றத்தில் கோரியுள்ளார்.

இந்நிலையில், நீதிமன்றம் மகளை தாயுடன் இருப்பதற்கே ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது.

இதனால் ஆத்திரத்தில் இருந்த ரவிச்சந்திரன் வடுகபட்டி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த மாமனார் சைவராஜை துப்பாக்கியால் சுட்டதில் அவர் உயிரிழந்தார்.

பின் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரவிச்சந்திரனை கைது செய்து, அவரிடம் இருந்த துப்பாக்கியை பறுமுதல் செய்தனர்.

இதையடுத்து, அவரை காவல்நிலையம் அழைத்து சென்ற போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்