வாகனத்திலிருந்து தவறி விழுந்த மகன்.. தெரியாமல் பின் சக்கரத்தால் ஏற்றி இறக்கிய தந்தை.. தாயின் கண் முன்னே நசுங்கிய உடல்

x

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் தந்தை ஓட்டி வந்த செப்டிக் டேங்க் வாகனத்தில் சிக்கி மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

காரியாபட்டி பெரியார்நகரைச் சேர்ந்த முத்துப்பாண்டி- கார்த்திகைச் செல்வி தம்பதி, செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணிகளை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ள நிலையில், 2 இளைய மகன்களுடன் திருச்சுழி சாலையில் உள்ள ஒரு வீட்ட்டில் செப்டிக் டேங்க்கை சுத்தம் செய்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, முத்துப்பாண்டி, மனைவி கார்த்திகைசெல்வி, இரண்டாவது மகன் ஹரிதாஸ் ஆகியோர் வாகனத்தின் முன்புறமும், இளைய மகன் பால்ராஜ் செப்டிக் வாகனத்தின் பின்புறம் அமர்ந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பால்ராஜ் தவறி கீழே விழுந்ததில், வாகனத்தின் பின்சக்கரம் ஏறி, பால்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த காரியாபட்டி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாய், தந்தை கண்ணெதிரே மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்