கிளி கூண்டில் புகுந்த பாம்பு.. அதிர்ச்சி அடைந்த வீட்டு உரிமையாளர்..! - ஆசையாய் வளர்த்த கிளிகள்...

x

கடலூர் அருகே, வளர்ப்பு கிளி கூண்டில் புகுந்து, முட்டைகளை விழுங்கிய பாம்பு, லாவகமாக மீட்கப்பட்டுள்ளது. செம்மண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. இவர் தனது வீட்டில் செல்லமாக வளர்த்துவரும் கிளிகளுக்கு உணவளிக்க சென்றபோது, கூண்டில் பாம்பு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனிடையே, தகவலின்பேரில் வந்த பாம்பு ஆர்வலர், கூண்டில் இருந்த முட்டை மற்றும் கிளி குஞ்சுக்களை விழுங்கிவிட்டு, பானையில் ஓய்வெடித்திருந்த பாம்பை லாவகமாக மீட்டார்.


Next Story

மேலும் செய்திகள்