நள்ளிரவில் பரபரப்பை கிளப்பிய சின்னத்திரை நடிகை.... ஆபாச மிரட்டல்... ரச்சிதா விவகாரத்தில் நடிகர் தினேஷ் பரபரப்பு வாக்குமூலம்....

x

ஆபாச மிரட்டல், அதிரடி புகார்னு பரபரப்ப ஏற்படுத்துன சீரியல் தம்பதியோட விவாகரத்து விவகாரம் இப்போ சூடு பிடிக்க ஆரம்பிச்சி இருக்கு..இரண்டு வருஷம் அமைதி பூங்காவா இருந்த சண்ட இப்போ தீடீர்னு கொழுந்து விட்டு எரிய காரணம் என்ன...


சின்னத்திரை நடிகை ரச்சிதா நள்ளிரவை பரபரப்பாக்கி, கட்டிய கணவனின் மீது காவல் நிலையத்தில் ஆபாச மிரட்டல் புகார் அளித்துவிட்டு ஆவேசமாக வெளியேறும் காணொளி தான் இது.

"அட நம்ம வீட்டு பொண்ணு மீனாட்சிக்கு என்ன ஆச்சி" என தமிழ் ரசிகர்கள், ரச்சிதாவின் இந்த பரபரப்பு புகாரால் அதிர்ந்து போயினர். குற்ற சரித்திரம் நிகழ்சி குழுவும், சின்னத்திரை நடிகையின் வாழ்கையில் அப்படி என்ன தான் சிக்கலென விசாரிக்க களத்தில் இறங்கியது.

நடிகை மகாலட்சுமி என்ற ரச்சிதா.

பெங்களூருவில் பிறந்த இவர், தமிழ் சின்னதிரையுலகில் தனது சிறந்த நடிப்பால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

தனியார் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து தமிழ் குடும்பங்களில் ஒருத்தராகவே குடிகொண்டவர். இதனால் ரச்சிதாவுக்கு எக்கச்சக்கமான ரசிகர் பட்டாளம் உண்டு

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றதன் மூலம் ரச்சிதாவின் ரசிகர் பட்டாளம் எகிறியது.

என்னதான் ரச்சிதாவின் திரையுலக வாழ்க்கை ஏறுமுகமாக இருந்தாலும், நிஜ வாழ்க்கையில் பல சறுக்கல்களை அவர் சந்தித்தார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொலைக்காட்சி தொடரில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து குடும்பத்தாரின் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்

ஆனால் அந்த வாழ்க்கையும் நிலைக்கவில்லை... கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட சிறு சிறு மனக்கசப்பினால் காதல் கல்யாணம், பிரிவில் முடிந்திருக்கிறது. கடந்த இரண்டு வருடமாகவே விவாகரத்து வாங்காமல் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகினறனர்.

இந்நிலையில் தான் கடந்த 20 ஆம் தேதி அன்று இரவு ரச்சிதா, கணவன் தினேஷ் தனக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி மிரட்டல் விடுப்பதாகவும், தனக்கு சுதந்திரம் கொடுக்காமல் கொடுமைப்படுத்துவதாகவும் மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

உண்மையில் நடந்தது என்ன..? ஆபாச மிரட்டல் உண்மையா...? என்பதை அறிந்து கொள்ள ரச்சிதாவின் கணவன் தினேஷிடம் விசாரிக்க தொடங்கினோம்.

அப்போது தான் ஆபாச மிரட்டல்கள் அனைத்தும் பொய் என நள்ளிரவு பரபரப்பிற்கான மர்மத்தை விளக்கினார் தினேஷ்.

பிரச்சனைகளை எப்படியாவது பேசி தீர்க்க, கடந்த இரண்டு வருடமாக ரச்சிதாவுக்கு வாட்சாப்பில் மெசேஜ் அனுப்பி சமாதனம் பேச முயற்சித்திருக்கிறார் தினேஷ். ஆனால் அதை எல்லாம் ரச்சிதா காதில் போட்டுக்கொள்ளவில்லை எனவும், நடந்த அத்தனைக்கும் ரச்சிதாவின் தோழியான டப்பிங் ஆர்டிஸ்ட் ஜிஜி தான் காரணம் என்றும் கூறி இருக்கிறார்.

நேரில் பார்த்து சமாதானம் பேச அழைத்ததை அப்படியே உள்டாவாக மாற்றி, ஜிஜியும் ரச்சிதாவும் இணைந்து ஆபாச மிரட்டல் விடுத்ததாக புகார் அளித்திருக்கிறார்கள் என்று கூறிய தினேஷ், தன்மீது சுமத்தப்பட்ட குற்றசாட்டுக்கு எந்த வித முகாந்திரமும் இல்லை என காவலர்கள் விசாரித்து அனுப்பியதாக கூறுகிறார்.

கணவன் தனக்கு சுதந்திரம் கொடுக்கவில்லை என்று ரச்சிதா கூறுவதாக சொன்ன குற்றச்சாட்டுகளை அறவே மறுத்திருக்கிறார் தினேஷ்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக நடந்த அனைத்திற்கும் பின்புலமாக பிரபல நடிகை இருப்பதாக சொன்னது தான் அதிர வைத்தது.

பிக்பாஸில் சென்று வந்த பிறகு ரச்சிதாவுக்கு கிடைத்த சில புதிய நட்பால் அவர் தவறான பாதையில் செல்வதாகவும், அவர்களின் தூண்டுதலாலேயே ரச்சிதா இப்படி நடந்து கொள்வதாகவும் கூறுகிறார். மேலும் அந்த நடிகையின் அண்ணன் தான் ரச்சிதா காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வந்த போது கூடவே இருந்ததாவும் தினேஷ் தெரிவித்தார்.

இப்படி தவறான நட்பு வட்டாரத்தால் திசை திருப்பப்படும் ரச்சிதாவுக்கு விருப்பம் இருந்தால் விவாகரத்து கொடுத்துவிட்டு விலகிவிடுவதாகவும் தன் தரப்பு நியாங்களை எடுத்து வைத்தார் தினேஷ்.

வனிதா விஜயகுமார், அர்ணவ் திவ்யா, சம்யுக்தா விஷ்ணுகாந்த் தம்பதிகளின் விவாகரத்து வரிசையில் அடுத்ததாக பகீர் கிளப்பி இருக்கும் இந்த தம்பதியின் விவகாரம் சூடுபிடிக்குமா...? அல்லது முடிவுக்கு வருமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Next Story

மேலும் செய்திகள்